2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மொனராகலையில் 1145 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

வெளிநாடுகள், கொழும்பு உள்ளிட்ட வெளிபிரதேசங்களில் மொனராகலை மாவட்டத்துக்கு வருகைத் தந்த 1145 பேர் அவரவர் வீடுகளில் சுயதனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனரென மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.

இதில் 140 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகைத் தந்தவர்கள் என்றும் இவர்கள் மொனராகலை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித அதிகாரியின் ஆலோசனைக்கமைய சுயதனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனரென அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் 3 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .