2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

லுணுகலை நகரில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

லுணுகலை பிரதான பாதையை அகலமாக்கி புனரமைக்கக் கோரி, லுணுகலை நகரில் 2000க்கும் மேற்பட்ட பொது மக்கள், கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை  இன்றைய தினம் முன்னெடுத்தனர்.

நகரின் பிரதான வீதியை மறித்த, அமர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் லுணுகலை பிரதேச செயலாளர் டீ.எல்.எச். திசாநாயக்கவிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

அதனையடுத்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினருடன்  லுணுகலை பிரதேச செயலாளர் கலந்துரையாடி பாதையை சீரமைத்துத் தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .