2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

வட்டவளையில் ஆர்ப்பாட்டம்

எஸ்.சதிஸ்   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டுஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு கோரியும் 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தியும், வட்டவளை, லொனாக் தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத்தின் கொழுந்து மடுவத்துக்கு முன்பாக, இன்று (6) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

“மலையக அரசயில்வாதிகளே, எம்மை ஏமாற்றதே” “கூட்டுஒப்பந்தத்தை இரத்துச் செய்”, “1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடு” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு, தொழிலாளர்கள் இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கலந்துகொண்டனர். 

ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுக்கு, அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழி வழங்கியிருந்தப் போதிலும், புதிய ஒப்பந்தத்தில், வெறும் 20 ரூபாயம் சம்பளமே அதிகரிக்கப்பட்டுள்ளதால், மலையகத்தில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக, பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .