2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வைத்தியர்கள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜப்க்ஷ

நுவரெலியா ரிகில்லகஸ்கொட ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள்,  ஏனைய ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் வைத்தியசாலையின் வாட் பிரிவுகளுக்குத் தேவையான ஒரு தொகை கட்டில்கள் என்பவற்றை, அமைச்சர் சி.பி.ரத்னாயக்க, இன்று (7) வழங்கி வைத்தார்.

நுவரெலியா பிரதேச வைத்திய அதிகாரிகள் அலுலகத்தின் கீழ் செயற்படும் மேற்படி வைத்தியசாலையில், தினமும் பெரும்பலான நோயாளர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

எனவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு, பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு உடைகள், கட்டில்கள் என்பன வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நிஷங்க விஜேவர்தனவிடம் கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .