2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் காயம்

உமாமகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 23 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, பெல்மதுளை பிரதான வீதியிலுள்ள  பட்டுகெதர எனுமிடத்தில் இன்று (23) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இரு சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெல்மதுளை பகுதிலிருந்து இரத்தினபுரி நோக்கிவந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை, அதன் பின்னால் அதிவேகமாக வந்த முச்சக்கர வண்டியொன்று  மோதியதில் மோட்டார் சைச்சிள் கீழே புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, மோதிய முச்சக்கர வண்டி குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தாமல்  சென்றதனால், பிரதேச மக்கள் அம்முச்சக்கர வண்டியை பிடிக்க முயற்சி செய்த போதிலும், அது முடியாமல் போகவே இது குறித்து இரத்தினபுரி பொலஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தந் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .