2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Nirosh   / 2021 ஜனவரி 16 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியின் பிரவுன்ஸ்விக் பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

காட்மோர் கல்கந்தை தோட்டத்தைச் சேர்ந்த 27  வயதுடைய ரகுநாதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் மஸ்கெலியாவிலிருந்து காட்மோர் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றுக்கு, காட்மோர் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞன் இடம் கொடுக்க முயற்சித்தவேளையில், கட்டுப்படையிழந்து சைக்கிள் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை படுகாயமடைந்த குறித்த இளைஞனை மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X