2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Editorial   / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

நாவலப்பிட்டி - கம்பளை பிரதான வீதியில், இன்று(4) காலை, லொறியொன்றும் ஓட்டோ ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோவின் சாரதி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டோ சாரதி, கம்பளையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு, வேலைக்குச் செல்லும்போது, பொருள்களை விநியோகிப்பதற்காக வந்த லொறியுடன்  மோதுண்டு  விபத்துக்குள்ளாகியுள்ளார் என்று தெரியவருகிறது.

இச்சம்பவத்தில், ஓட்டோ பலத்த சேதமாகியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .