2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் சாரதி படுகாயம்; ஒன்பது பேர் தெய்வாதீனமாக உயிர்தப்பினர்

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித்த ஆரியவன்ச

 

பதுளை- பண்டாரவளை வீதி, பதுளை, பிங்ஹார பகுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், சாரதி ஒருவர்  படுகாயமடைந்துள்ளதுடன், ஒன்பது பேர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த லொறியும் வானொன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளதுடன், பிரதான வீதியில், லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வானின் சாரதியே படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அட்டம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்து ஒன்பது பேர், மேற்படி வானில் பயணித்துள்ளனர் என்றும் இவர்கள், மஹியங்கனை சமன் விகாரயைில் இடம்பெற்ற பெரஹெரா நிகழ்வைக் கண்டுகளிப்பதற்காக, வானில் வந்துள்ளனர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி ஒன்பது பேரும் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள், பெரஹெராவைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போதே, இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பில், பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .