2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் பிரான்ஸ் பிரஜை பலி

Kogilavani   / 2018 ஜூன் 26 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய பொலிஸ் பிரிவு, எல்ல வீதி இரண்டாம் மைல்கல் பகுதியில், இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் எலன் அன்ரு எல்பட் (வயது 78) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் பாதையை கடக்க முற்பட்டபோது, வெல்லவாயவிருந்து எல்ல நோக்கிப் பயணித்த பஸ்ஸொன்றில் மோதி உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவரை, வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .