2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘விமலுக்கு இராதா கண்டனம்’

டி. ஷங்கீதன்   / 2020 ஜூன் 14 , மு.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர்கள் தொடர்பாகவும் முஸ்லிம்கள் தொடர்பாகவும், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

நுவரெலியா மாவடட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம், நுவரெலியாவில் இன்று (14) நடைபெற்றது.  

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், விமல் வீரவன்சவின் கருத்து, முழுமையாக இனவாதத்தைத் தூண்டும் கருத்தாகவே அமைந்துள்ளது என்றும் இவ்வாறான கருத்துகளை வெளியிடுகின்றவர்கள் தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்  மீண்டும் இனவாதம் என்ற ஓர் ஆயுதம் கையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் இது, இன்றைய சூழ்நிலையில் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X