2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வீதி அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்திக்கு, அரசாங்கத்தின் மூலம் 900 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அபிவிருத்தி செய்யப்பட உள்ள வீதிகள் அனைத்தும், பத்திரிகை விளம்பரம் மூலம் விலைமனுக் கோரல் செய்யப்பட்டு, அவை, நிர்மாண நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனவென, அவர் மேலும் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் 583 வீதிகள் உள்ளன என்பதுடன், அவை மொத்தமாக 2,633 கிலோமீற்றர் நீளம் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .