2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வீதித் தடையை உடன் அகற்றுமாறு ஆளுநர் உத்தரவு

Editorial   / 2020 ஜனவரி 17 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

பலாங்கொடை - நொன்பேரியல் வீதியில் நொன்பேர யல் தோட்ட  நிர்வாகத்தால் போடப்பட்டுள்ள  வீதித் தடையை உடன் அகற்றுமா று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ நேற்று முன்தினம் (15)  தோ ட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இவ்வீதித்தடையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் நோக்கில், நேற்று முன்தினம் இப்பகுதி க்கு விஜயம் செய்த ஆளுநர் தோட்ட நி ர்வாகம் நிர்வாகத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போதே இவ் வாறு உத்தரவு பிறப்பித்தார்.

இவ்விடயமாக ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், இவ்வீதித் தடையை தொடர்வதன் மூலம் இப்பிரதேசத்திலுள்ள தோட்ட மற்றும் கிராமிய மக்க ளுக்கு மட்டுமன்றி  உல்லாசப் பயணிகளுக்கும் இவ்வழியாக ஏனைய பிரதேசங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமையை கருத்தில் கொண்டு, தோட்ட நிர்வாகம் இவ்வீதி தடையை அகற்றி பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .