2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வேட்பு மனுக்கள் கையேற்கும் நடவடிக்கை

ஆ.ரமேஸ்   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்காக போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்பாளர்கள் பெயரடங்கிய வேட்பு மனுக்களை கையேற்கும் நடவடிக்கைகள், நுவரெலியா மாவட்ட செயலகத்தில், இன்று (11) காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

மாவட்ட பிரதி தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான எம்.பி.ஆர் புஸ்பகுமாரவின் கண்காணிப்பில், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் 5ஆவது மாடியில், இதற்கான காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் வழமைப்போல நுவரெலியா ஜெயத்திலக்க மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .