2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி ஆரம்பம்

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

வெள்ள அச்சுறுத்தல் நிலவும் பகுதிகளிலுள்ள வீடுகள், கட்டடங்களுக்கு வெள்ள அனர்த்த அறிவுறுத்தல் ஸ்டிக்கர்களை ஒட்டும் வேலைத்திட்டம், இரத்தினபுரி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவக் காரியாலயத்தாலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்டிக்கர்களை ஒட்டுவதன் மூலம், வெள்ள அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் வீடுகள், வர்த்தக நிலையங்களை இலகுவாக அடையாளம் காணலாம் என்றும் அத்துடன் அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு இலகுவாக இருக்கும் என்றும் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .