2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஹட்டனில் இன்றும் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2021 ஜனவரி 17 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, ஆ.ரமேஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, ஹட்டனில் இன்று (17) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

சிவில் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள்  கலந்துகொண்டனர். 

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், 'தொழிலாளர்ளை மீண்டும் மீண்டும் அடகு வைக்காதே', 'கம்பனிகளே தோட்டங்களைவிட்டு வெளியேறு' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X