2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வு

Yuganthini   / 2017 ஜூன் 20 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகரகம, நாவின்ன ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக் கட்டடம், நேற்று  (19) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டது.

புராதன பெறுமானங்களை தன்னகத்தே கொண்டுள்ள நாவின்ன ரஜமகா விகாரையில், 100 இலட்சத்துக்கும் அதிகமான நிதி ஒதுக்கிட்டின் கீழ் இப்புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நாவின்ன ரஜமகா விகாரையின் விகாராதிபதி, மொனராகலை மாவட்ட பிரதம சங்கநாயக்கர் வண. பரதண்டே இந்ர ரத்ன தேரரின் அழைப்புக்கமைய, நேற்று பிற்பகல் விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, வழிபாடுகளில் ஈடுபட்டு, ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர், நினைவு படிகத்தை திறந்து வைத்து கட்டடத்தை திறந்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .