2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’அநாவசியமாக சுற்றித்திரிய வேண்டாமென எச்சரிக்கை’

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

கொவிட் 19 வைரஸ் பரவிவருவதன் காரணமாக, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பேருவளை நகரில் பொலிஸார், இராணுவத்தினர் காவலரண்களை அமைத்து, பாதுகாப்பு கடமைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

அத்தியாவசியத் தேவைகளுக்காக மாத்திரமே மக்களுக்கு வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், வேறு தேவைகளுக்காக யாரும் வெளியில் திரிய முடியாதென பொலிஸார் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் உரிய முறையில் சட்டத்தை பின்பற்றுமாறு மீண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .