2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிகரம் அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் அன்பளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு கட்டான கல்விக்  கோட்டப் பிரிவை சேர்ந்த வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கும், அந்த பிரதேசத்தை சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும்  குடும்பங்களுக்கு,   நீர்கொழும்பு சிகரம் பவுண்டேசன் அமைப்பினர் நேற்று (19)   ஒரு தொகை உலர் உணவுப் பொருட்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று கையளித்தனர்.

மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் வாழும் சிறிய பலகை வீட்டுக்குச் சென்று அந்த மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. 

இதன்போது வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியால அதிபர் எம். இஸட். ஷாஜஹான் உடனிருந்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .