2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தைப்பொங்கல் விழா

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தைப்பொங்கல் விழா, வரும் ஞாயிற்றுக்கிழமை (16), இந்து இளைஞர்மன்ற கலாசார மண்டபத்தில், அதன் தலைவர் பொ.ஜெயராமன் தலைமையில் காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

காலை 7.45 மணிக்கு பொங்கல் வைத்தலும் விஷேட பூஜையும் இடம்பெறுவதுடன், காலை 9 மணிமுதல்? தரம் இரண்டு முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்படவுள்ளன.

பின்னர், திறந்தப் போட்டிகளாக, தேங்காய் துறுவுதல், தொப்பி மாற்றுதல், கோலம் போடுதல் , சங்கீதக் கதிரை ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதாக, மன்றத்தின் பொதுச் செயலாளர் சு. நவரட்ணராஜா அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .