2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு

Editorial   / 2020 மே 31 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு தனியார் நிறுவனம் ஒன்றினால் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு; ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் எட்டு மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் ஏழாவது மாடியில்  இந்த தீவிர சிகிச்சைப் பிரிவு  அமைக்கப்பட்டுள்ளது.

புதிய தீவிர சிகிச்சைப் பிரிவு பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (29) மாலை இடம்பெற்றது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா, கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே, வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .