2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பேருவளை பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா

S. Shivany   / 2020 நவம்பர் 25 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர் தர்காநகர் பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது. 
இதனையடுத்து அவரது வீட்டார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், சாரதி ஆகியோரை அவர்களது வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் சென்றதாகக் கூறப்படும், பேருவளை பிரதேச சபையின் தர்காநகர் உப காரியாலயத்தை, டிசெம்பர் மாதம் 07 ஆம் திகதிவரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .