2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போலி கல்வி நிறுவன கோடீஸ்வர வர்த்தகர் கைது

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த கோடிஸ்வர வர்த்தகர் ஒருவர் இன்று(22) காலை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு-குடியகல்வு அதிகாரசபையின் அனுமதியின்றி வௌிநாட்டு கடவுச் சீட்டுகளுடன் குறித்த நிறுவனத்தை நடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட  பல நிதி மோசடிகள் குறித்து   கொழும்பு-கோட்டை நீதவான் நீதிமன்றிடம் பெறப்பட்ட சுற்றிவளைப்பு அனுமதிக்கமையவே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்,இதன்போது இவரிடமிருந்து பல வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X