2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் மீட்பு

Editorial   / 2017 ஜூலை 12 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாதுவ பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிட்ட குழுவினர், அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும் கடத்திச் சென்று, அம்பலாங்கொட பிரதான பஸ் நிலையத்தில் கைவிட்டுச் சென்றுள்ள விதம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளது.

அம்பலாங்கொட பிரதான பேருந்து நிலையத்தில் நேற்று காலை உரிமையாளர் அற்ற மோட்டார் சைக்கிளொன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மேற்கொண்ட விசாரணையின் போதே, இந்த மோட்டார் சைக்கிள் கடந்த 5ஆம் திகதி கடத்தப்பட்டு, கைவிடப்பட்டுச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .