2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வீதியைப் புனரமைத்து தருமாறு கோரிக்கை

Editorial   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்

பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட தர்கா நகர் தேசிய கல்வியியற் கல்லூரி, அல் ஹம்ரா மகா வித்தியாலயம் ஆகிய கல்விக் கூடங்களுக்குச் செல்லும் வீதியை புனரமைத்துத் தருமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் இந்த வீதியிலே மழை நீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

இந்த வீதியைப் புனரமைத்து, மழை நீர் சீராக வடிந்து செல்ல வடிகானும் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேச வாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .