2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

109 இந்திய மீனவர்கள் விடுதலை

Editorial   / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 109 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக, யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களால் குறித்த 109 மீனவர்களும் இன்று (16) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் இராமநாதபுரம், புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

விடுவிக்கப்பட்ட குறித்த மீனவர்கள் இன்று (16) யாழ் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை ஓரிரு தினங்களில் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .