2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘13ஐ அமுல்படுத்த வேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமை’

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டிய தார்மீகக் கடமை இந்தியாவுக்கு இருப்பதாகத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அதே நேரம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை பெற்றுத் தருவதற்கு, இந்தியா தொடர்ந்தும் உதவ வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றையே தாங்கள் கோரி வருவதாகவும் அத்தகையதொரு தீர்வை அடைவதற்கு இந்தியா தொடர்ந்தும் தங்களுக்கு உதவி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.

வெளியில் இருக்கின்ற கட்சிகளை ஆரம்பித்தவர்கள் கூட்டமைப்பில் இருந்து சென்றவர்களாக தான் இருக்கின்றனரெனத் தெரிவித்த அவர், ஆகவே அவர்கள் மீள தாய்வீட்டுக்கு வரலாமெனவும் அழைப்பு விடுத்தார்.

அவ்வாறு தாங்கள் கோரவது, தோல்வியின் நிமித்தம் அல்லவெனவும், சிவஞானம் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X