2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

140 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். சுழிபுரம் பகுதியிலுள்ள காடுடொன்றுக்குள் கசிப்பு வடிப்பதற்கு தயாராக வைத்திருந்த 140 லீற்றர் கோடாவுடன் சந்தேகநபரொருவரை நேற்று  (18) கைது செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கசிப்பு வடிப்பதற்கு வைத்திருந்த உபகரணங்களான சட்டி, பானை, குழாய் போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த காடு பொலிஸ் அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டது.  அதன்போதே, கசிப்பு வடிப்பதற்கு வைத்திருந்த கோடா மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .