2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

16 பவுண் நகைகளை திருடிய இருவர் கைது

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 06 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். அரியாலை பகுதியில் திருட்டில் ஈடுபட்டனர் எனும் குற்றசாட்டில் இரண்டு இளைஞர்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உட்புகுந்த திருடர்கள் பணம் மற்றும் 16 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அரியாலை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை நேற்று (05) செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் களவாடப்பட்ட நகைகளை யாழ்.நகர் பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் உருக்கியுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்தும் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X