2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

38 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 19 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் நேற்று (18) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, 38 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, கொடிகாமம் பகுதியிலிருந்து 36 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை, உடமையில் வைத்திருந்த இருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வடமராட்சி கிழக்கில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சாவைக் கடத்திய சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து, 2 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .