2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 பெப்ரவரி 19 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

4 கிலோகிராம் நிறையுடைய கஞ்சாவை, விற்பனை செய்யும் நோக்குடன் உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று (18) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே 5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அரியாலை பகுதியில் வைத்து யாழ்ப்பாண பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X