2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

6 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என் .ராஜ்

பளை - அத்திரான் பகுதியில், நேற்று (02) மாலை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் மேற்கண்ட சுற்றிவளைப்பின் போது, 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன், 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர், தாளயடி பகுதியைச் சேர்ந்தவரென, விசாரணைகளின் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் கஞ்சாவும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டன.

மேலதிக விசாரணைக்காக, சந்தேகநபர் பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X