2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘7 ஆயிரம் ரூபாயை மீள வழங்க வேண்டும்’

Editorial   / 2018 மே 25 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன்

“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக தான் வழங்கிய 7 ஆயிரம் ரூபாயை தனக்கு மீள வழங்குமாறு” வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

மே மாதம் 18 ஆம் திகதி அன்று இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாட்டுச் செலவுகளின் பொருட்டு, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 38 பேரில் 33 பேரிடம் இருந்து தலா 7 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வை வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்வதன் அடிப்படையில் அந்த நிதி பெறப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த நினைவை வடக்கு மாகாண சபை செய்யவில்லை என்ற அடிப்படையில், தன்னால் சம்மதம் தெரிவிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபாயை தனக்கு மாகாண சபை மீள வழங்க வேண்டும் என சி.தவராசா சபையின் அவைத் தலைவருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .