2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'அடுத்த முதலமைச்சர் தொடர்பில் என்னால் முடிவெடுக்க முடியாது'

George   / 2017 ஜூன் 15 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

“அடுத்த முதலமைச்சர் தெரிவு தொடர்பில் கட்சியின் தலைவரான என்னால் முடிவுகளை எடுக்க முடியாது. கட்சியின் செயலாளரே அம்முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என, வட மாகாண ஆளுநர்  ரெஜினோல்ட் குரேவிடம் தெரிவித்துள்ளேன் என, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் வட மாகாண ஆளுநர்  ரெஜினோல்ட் குரே ஆகியோர் இன்று காலை சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில், மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், “வட மாகாண ஆளுநர் விடுத்த அழைப்பின் பிரகாரம் நான் அவரை சந்தித்திருந்தேன்.

“முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக அவர் அழைத்திருந்தார்.

“கட்சியின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இன்று மதியம் கலந்தாலோசித்து எடுக்கப்படும் முடிவுகளை அறிவிப்பதாக ஆளுநரிடம் தெரிவித்தேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .