2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள்

Editorial   / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்

நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.  

அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர், அன்றைய மாதாந்தக் கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்தத் தவறிய ஒருவரை, பணத்தைக் கட்ட தகுதியில்லை என்றால், பிச்சை எடுத்துக் கட்டுமாறு, உரத்த குரலில் தெரிவித்துள்ளார்.  

இது மாத்திரமன்றி பல கிராமங்களில் அலுவலக நேரங்கள் தவிர்ந்த நேரங்களில் செல்லும் நிதி நிறுவன ஊழியர்கள் மக்களிடம் சண்டியர்கள் போல் நடந்துகொள்வதாகவும், வீட்டுப் பாவனைப் பொருட்களைத் தூக்கிச் செல்லப் போவதாக மிரட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .