2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

அமைச்சர்கள் தொடர்பில் இதுவரை தீர்மானமில்லை

எஸ்.கார்த்திகேசு   / 2017 ஜூன் 21 , மு.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

புதிய இரு அமைச்சர்களின் நியமனங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ளவில்லை என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்றுப் புதன்கிழமை (21) மாலை வடமாகாண ஆளுநர் முன்னிலையில், வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகிய இரு அமைச்சுகளையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் பின்னர், ஊடகவியராளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த முதலமைச்சர், “பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு அது சுமூகமாக முடிவடைந்தமை மகிழ்ச்சியாகவுள்ளது.  இது அமைச்சுக்களின் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இயங்குவதற்கு ஏற்ற வகையில் இரு அமைச்சுகளையும் நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்” என்றார்.

அத்துடன், “அடுத்த அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ளவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .