2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

Editorial   / 2018 ஜூன் 07 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியரான பிரதீபன் எனும் ஆசிரியரே நேற்றிரவு (06) தாக்கப்பட்டுள்ளார்.

இத் தாக்குதலைக் கண்டித்து கல்லூரியின் நுழைவாயிலில் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து இன்று (07) போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது தாக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி வேண்டுமெனவும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும், ஆசிரியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .