Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
வடக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களது காணிகளில் ஆயிரம் ஏக்கர் காணிகள் இந்த ஆண்டு மீள பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். வலிவடக்கில் மீள்குடியேற்ற அமைச்சால் வழங்கப்பட்ட காணி மற்றும் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடமைப்பு திட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று (05) ; இடம்பெற்றிருந்த்து.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களது காணிகளில் ஆயிரம் ஏக்கர் காணிகள் இந்த ஆண்டு மீள பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. அவற்றில்; முதற்கட்டமாக வலி வடக்கு கட்டுவன் மயிலிட்டி மேற்கு பகுதியில் உள்ள 650 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 16 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.
மேலும், ஏற்கனவே பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டிருந்த அராலி - பருத்தித்துறை வீதி எதிர்வரும் 16 ஆம் திகதியில் இருந்து காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரை மக்கள் பாவனைக்காக முற்றாக திறந்துவிடப்படவுள்ளது என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago