2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்திய துணைத் தூதரகம் முன்பாக போராட்டம்

Editorial   / 2018 ஜூன் 01 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக இன்று (01) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் தூத்துக்குடியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில், மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய மத்திய மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது “தமிழ் நாட்டு அரசே நீதிகேட்ட மக்களுக்கு துப்பாக்கி குண்டுகளா, மோடி எடப்பாடி அரசே தூத்துக்குடி கொலையாளிகளுக்கு தண்டனை என்ன, தூத்துக்குடிக்கு நியாயம் வழங்கு, மோடியின் கையில் மக்களின் குருதி, மோடி எடப்பாடி ஆட்சியாளர்களே கொலையாளிகளுக்கு தண்டனை” உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .