Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
செல்வநாயகம் கபிலன் / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் எண்மரையும் தொடர்ந்து, இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் இன்று (14) உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 30ஆம் திகதி இரவு, இரண்டு விசைப் படகுகளுடன் நுழைந்து, மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, குறித்த மீனவர்கள், காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த மீனவர்களை விடுவிப்பதற்குரிய ஆலோசனை, சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து கிடைக்கவில்லை என அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கினை ஆராய்ந்த நீதவான் மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் காலத்தினை நீடித்து உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago