2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் 49 பேருக்கும் விளக்கமறியல்

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 49 பேரையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இராமலிங்கம் சபேசன் நேற்று (08) உத்தரவிட்டார்.

12 விசைப்படகுகளுடன் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இந்திய மீனவர்களை 49 பேரையும், நெடுந்தீவு கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கடந்த நேற்று முன்தினம் (07) இரவு கைது செய்திருந்தனர்.

கடற்படையினரால், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் நேற்று (08) மாலை ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது மீனவர்களை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .