2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், கே.தயா

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் நேற்றிரவு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்தொழில் நீர்வள திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், தமிழக மாநிலம் - நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

இவர்களிடம் இருந்து படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணையின் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .