2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இனவாத வன்செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 மார்ச் 13 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

கண்டியில் இடம்பெற்றிருந்த முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களுக்கிடையிலான இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று (13) கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

யாழ்.மத்திய பஸ் நிலையத்தின் முன் இடம்பெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற இன அடக்குமுறை, யுத்தத்தின் காரணமாகப் பல்வேறு இன்னல்களையும் எதிர்கொண்ட எம்மை, மீண்டுமொரு இனவாத யுத்தத்துக்குள் தள்ளும் முயற்சியாக, அண்மையில் கண்டி மாவட்டத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத வன்செயல்கள் அமைந்துள்ளன.

எமது வாழ்வை அழிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக, நாம் அனைவரும் ஒற்றுமையாகக் குரல்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .