2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இரணைமடுக்குளத்தின் 99ஆவது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 99 ஆவது  நிறைவை முன்னிட்டு 99 பானைகளில் பொங்கல் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றுள்ளது.

இரணைமடுக்குளம் நீர்ப்பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு 99 ஆண்டைக் கொண்டாடும் வகையில் கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து குறித்த பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

பொங்கல் நிகழ்வில், பிரதான பொங்கல் பானையை வடமாகாண சபை முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், முன்னால் வடமாhண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .