2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இராணுவ வாகனம் மோதி இருவர் பலி : இருவர் படுகாயம்

க. அகரன்   / 2019 ஜனவரி 21 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு தட்டாமலைப்பகுதியில் இன்று (21) மதியம் 1 மணியளவில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி இன்று வருகை தந்திருந்த நிலையில் அவரது பாதுகாப்புக்காக சென்ற இராணுவ வாகனம் பணியை நிறைவு செய்து வவுனியா பகுதிக்கு திரும்பிய வேளை இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இராணுவ வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .