2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இராணுவ வீரர் மீது தாக்குதல்

Editorial   / 2018 ஜூலை 23 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செ.கீதாஞ்சன்

வற்றாப்பளை - கேப்பாபுலவு வீதியில், நேற்று (22) மாலை, இராணுவ வீரர் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

முல்லைத்தீவு - கேப்பாபுலவுப் பகுகுதியைச் சேர்ந்த, செந்தூரன் (வயது 28) என்பவரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இவர், பொலன்னறுவையிலுள்ள படைமுகாமில் பணியாற்றும் இராணுவ வீரரென, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இராணுவ வீரர், விடுமுறை நிமித்தம் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போதே, இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இராணுவ வீரர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .