2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘இருப்பைப் பலப்படுத்த உதவ வேண்டும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டத்தின் எல்லை கிராமங்களான ஒதியமலை மற்றும் காஞ்சிரமோட்டை கிராமத்துக்கு பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த மக்களை பார்வையிட்டுள்ளதுடன், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.

ஒதியமலை கிராமத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் அந்த மக்கள் விவசாயம் செய்வதற்கு முட்டுக்கட்டையாக அண்மை நாள்களில் படையினரின் பிரசன்னம் காணப்பட்டுள்ளன. அருகில் சிங்கள கிராமங்கள் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

காஞ்சிரமோட்டை கிராமத்தில் மக்கள் நீண்டகாலமாக குடியேற்றியும் எதுவித அடிப்படை வசதிகள் கூட செய்துகொடுக்காத நிலை காணப்படுகின்றது. வனவளத்திணைக்களத்தினரும் படையினரின் மக்களின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக காணப்படுகின்றார்கள்.

மக்களின் காணிகளில் ஒரு மலசலகூட கிடங்கை வெட்ட முடியாத நிலை ஒரு மரத்தைக் கூட தறிக்கமுடியாத நிலை மரங்கள் வெட்டப்பட்டால்தான், கிராமத்துக்கான மின்சாரம் கிடைக்கும் என்ற நிலையில் மக்கள் வாழ்ந்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் முறையிட்டுள்ளார்கள்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஒதியமலைப்பகுதியில் மக்களின்  காணிகள் மகாவலி எல் வலயத்துக்குள் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, இந்த நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள், காணியில் விவசாயம் செய்யும் போது காணி உறுதி பத்திரங்களைக் காட்டுமாறு, படையினர் கேட்டுள்ளதாகவும் விவசாய காணியில் செய்கை பண்ண முடியாத நிலைக்கு அச்சறுத்தல்களுக்கு, தாம் உள்ளாகியுள்ளதாகவும் முறையிட்டுள்ளார்கள்.

“இந்த மக்கள் தொடர்ச்சியாக விவசாயம் செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகின்றார்கள். மக்களுடன் நாங்கள் தொடர்ந்து செயற்பட வேண்டிய நிலை உள்ளது. 

புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களும் தாயத்தில் உள்ள எல்லைக்கிராம மக்களின் இருப்பைப் பலப்படுத்துவதற்கு உதவிசெய்ய முன்வரவேண்டும்” என்றும், செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X