2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியக் கடற்படையினரால் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

கடந்த மாதம் படகின் இயந்திரக் கோளாறு காரணமாக, தமிழ்நாட்டில் கரையொதுங்கிய பருத்தித்துறை மீனவர்கள், இந்தியக் கடற்படையினரால் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இலங்கைக் கடற்பரப்பில் கைதாகி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவுக்கு அமைய 77 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, நாகப்பட்டினம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட பருத்தித்துறை மீனவர்கள் இருவரும் நேற்று (09) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .