2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இளைஞனுக்கு கொரோனா அறிகுறி

Princiya Dixci   / 2020 நவம்பர் 29 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், என்.ராஜ்

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன்,  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கோவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர், பஸ்ஸிலிருந்து இறங்கியதும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது தாயார், வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

"அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், நேற்று (28) மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் தனக்கு காய்ச்சல் உள்ளதாகவும் உடல்நிலை சரியில்லை என்றும் தாயாருக்கு அறிவித்துள்ளார். அதனால் தாயார் அவரை, யாழ்ப்பாணம் நகர் பஸ் நிலையத்துக்குச் சென்று, அல்லைப்பிட்டியுள்ள வீட்டு அழைத்துச் சென்றுள்ளார்.

“பின்னர் அந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கோவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் பிசிஆர் பரிசோதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பரிசோதனை அறிக்கை நாளை (30) கிடைக்கும்” என்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .