2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஈ.பி.டி.பி உறுப்பினருக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை

Editorial   / 2018 ஜூலை 10 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஜெகன் என அழைக்கப்படும் வேலும் மயிலும் குகேந்திரனுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நாளை (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  

உறுப்பினர் வேலும் மயிலும் குகேந்திரன், இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர் எனும் அடிப்படையில், அவர் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினராக அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் எனத் தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஒருவர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.  

இந்நிலையில், இந்த வழக்கு, நாளை (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .