2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘உண்டியலில் இட்ட பணம்’

எம். றொசாந்த்   / 2018 மே 31 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

“முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கொடுத்த பணத்தை கோயில் உண்டியலில் போட்டதாக நினையுங்கள்” என எதிர்க்கட்சி தலைவரிடம் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்று (31) கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.

அதன் போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கு என மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்ப தருமாறு கோரி இருந்தார்.

இதன்போதே உறுப்பினர் சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஒரு புனிதமான தினம். அது நடந்து முடிந்ததை பற்றி கதைத்து அதனை கொச்சைப்படுத்த கூடாது. எனவே அது தொடர்பில் சபையில் கதைப்பதை நிறுத்துவோம்.

எதிர்க்கட்சி தலைவர், அதற்கு கொடுத்த பணத்தை கோயில் உண்டியலில் போட்ட பணமாக நினையுங்கள். உண்டியலில் போட்ட பணத்தை திருப்பி தாருங்கள் என கேட்க கூடாது” என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் தனது கோரிக்கையை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .